வா பாவி இளைப்பாற


I heard the voice of Jesus say

LYRICS


1. ”வா பாவி, இளைப்பாற வா,
என் திவ்விய மார்பிலே
நீ சாய்ந்து சுகி,” என்பதாய்
நல் மீட்பர் கூறவே;
இளைத்துப்போன நீசனாய்
வந்தாறித் தேறினேன்;
என் பாரம் நீங்கி, இயேசுவால்
சந்தோஷமாயினேன்.

2. ”வா, பாவி, தாகந்தீர வா,
தாராளமாகவே
நான் ஜீவ தண்ணீர் தருவேன்,”
என்றார் என் நாதரே;
அவ்வாறு ஜீவ ஊற்றிலே
நான் பானம்பண்ணினேன்;
என் தாகம் தீர்ந்து பலமும்
பேர் வாழ்வும் அடைந்தேன்.

3. ”வா, பாவி, இருள் நீங்க வா;
நான் லோக ஜோதியே,
உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,”
என்றார் என் நேசரே;
மெய்ஞான அருணோதயம்
அவ்வாறு நான் கண்டேன்
அஜ்ஜோதியில் சந்தோஷமாய்
நான் என்றும் ஜீவிப்பேன்.