தெய்வ சமாதான


Like a river glorious

LYRICS


1 தெய்வா சமாதான இன்ப நதியே
மா பிரவாகமான வெள்ளம் போலவே
நிறைவாகப் பாயும் ஓய்வில்லாமலும்
ஓட ஆழமாயும் நித்தம் பெருகும்
அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்


2 கையின் நிழலாலே என்னை மறைத்தார்
சத்ரு பயத்தாலே கலங்க விடார்
சஞ்சலம் வராமல் அங்கே காக்கிறார்
ஏங்கி தியங்காமல் தங்கச் செய்கிறார்.
அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்

3 சூர்ய ஜோதியாலே நிழல் சாயையும்
காணப்பட்டாற் போலே துன்பம் துக்கமும்
ஒப்பில்லா பேரன்பாம் சூர்ய சாயையே
அதால் வாழ் நாள் எல்லாம் சோர மாட்டேனே
அருள் நாதர் மீதில் சார்ந்து சுகிப்பேன்
நித்தம் இளைப்பாறல் பெற்று வாழுவேன்