கூர் ஆணி தேகம்


Forgive them O My Father

LYRICS


1. கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப் பட்டார்;
’பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும்’ என்றார்.

2. எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்.

3. உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன்.

4. ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்