வாழ்க பாக்கிய காலை


Welcome happy morn

LYRICS


1. ”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;
மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
உம்மை சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்.

”வாழ்க பாக்கிய காலை!” என்றும் கூறுவார்
இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்;

2. நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன் சுகமாம்
நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்
நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்
மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்.

3. ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்
மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்;
‘இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்’
என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்.

4. பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே,
வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே;
மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே
உமதொளி தந்து எம்மைக் காருமே